Google Pixel- the new future of Google

The new Google Pixel is a phone we really want to love, but we've not fallen head over heels for it just yet. The design and price are questionable – but there's an awful lot of potential under the hood.

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

உங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர

One of the biggest and most frequently asked question online in the Internet Marketing industry is "How do I get started"

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்.

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்

(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.

02 July, 2010

ரைட் கிளிக் மெனு - கிபோர்ட் குறுக்கு வழி


கணணியில் வேலைசெய்யும்போது Right Click செய்ய mouse ஐ அசைப்பதற்கும் சோம்பேறியானவரா நீங்கள்? அல்லது இதன்மூலம் சில செக்கன்களை வீணடிக்கமுடியாதளவுக்கு பிசி ஆன ஆளா?


இப்பதிவு உங்களுக்கே...


சாதாரண எந்தவொரு windows keyboard இலும் படத்தில் உள்ள இந்த key ஐ காணமுடியும்। இது உங்களுக்காக Right Click இனை செய்வதற்கான key ஆகும்.





இந்த key ஐ உங்கள் keyboardஇல் காணாவிடின் Shift + F10 இனூடாகவும் இந்த வேலையை செய்யமுடியும்।





28 June, 2010

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்



இதனை செய்வதற்கு நமக்கு LockImage என்ற software தேவைப்படும். இந்த software ஆனது சரியான password ஐ கொடுக்காமல் திறக்கவோ பார்க்கவோ விடமாட்டாது.

LockImage என்பது freeware எனப்படும் இலவச software வகையைச்சேர்ந்தது.

ஒரு படத்தை lock பண்ணுவதற்கு தேவையான படத்தை இந்த software இனூடாக திறக்கவேண்டும். அதன்பின் Save As என்பதனூடாக Save சேய்யவெண்டும்.


name ஐயும் type ஐயும் கொடுத்த பின் password கொடுக்கமுடியும்.

அவ்வளவுதான்.
இதை திறப்பதற்கு software தேவையில்லை. வெறுமனே password ஐ கொடுத்தால் போதும்.



குறிப்பு - இம்முறை மூலம் lock பண்ணிய படங்களை மீண்டும் சாதாரணமாக திறக்கப்படும் படமாக மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்க.

இங்கே Lockimage softwareவை டவுன்லோட் செய்க
Download LockImage



21 June, 2010

பேஸ்புக்கில் உங்கள் போட்டோக்களுக்கு கொமன்ட் போடும்போது வரும் நோடிபிகேஷன்னை நிறுத்த

பேஸ்புக்கில் இணைக்கப்பட்ட போட்டக்களுக்கு நண்பர்கள் பெருவாரியாக கொமன்ட் இடும்போது, அது தொடர்பான நோட்டிபிகேஷன் அதிகமாக இருப்பதால் உங்களை எரிச்சல் அடையச்செய்யக்கூடும். அதிலும் வேறு யாரோ உங்களை தன்னுடைய போட்டோவில் டேக் செய்ய வரும் நோட்டிபிகேஷன்கள் இன்னும் எரிச்சல் ஊட்டுபவை. இந்த நோட்டிபிகேஷன்களை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.

1. உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு லொகின் செய்யுங்கள்
2. Account --> Account Setting இல் Notification என்ற டப் ஐ தெரிவுசெய்யவும். அதில் Photos என்ற தலைப்பிற்கு கீழ் Comments on my photos இல் டிக் மார்க்கை அகற்றிவிடவும்.



3. வேறுயாரும் படங்களில் உங்களை இணைத்திருந்தால் அந்த புகைப்படத்திற்கு செலலவும்.

அந்த படத்தின் கீழ் இருக்கும் பெயர்களில் உங்கள் பெயருக்கு அடுத்ததாக இருக்கும் remove tag என்பதை என்பதை அழுத்துவதன் மூலம் டேக் ஐ அகற்றலாம்



15 June, 2010

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்


"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"
ஆனாலும்.....

மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்
இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்
கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு
கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!


''நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?''
(புனித குர்ஆன் 55:60)

09 June, 2010

மனிதம் மிளிர்கிறது




அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ளசிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒருசிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்கமுடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார்

இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்றுஎப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள்என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய
முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன்படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்குபதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாகஇருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார்.

“நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும்இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என்
மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....”

அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

ஒரு நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில்நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball)விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து தன் தந்தையிடம்கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”அவருக்குத் தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டார்.

“என் மகனும ஆடஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?”
அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்தசிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக அவரிடம் சொன்னான். “நாங்கள்
இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”
அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த தந்தையின் மனம் நிறைந்தது.

ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி
வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச்சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும்,அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடுப்ந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும்.ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின் அணியினர்
கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையைஎதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தைஅவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது.

ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன்

அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.
மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது.ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்கஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..
நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

அதைச் சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது....”

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.

இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச்செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பானசிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும்.
அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால்,வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில்

அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா?

25 May, 2010

ஆங்கில அரிச்சுவடி சீர்திருத்தம்

தமிழ் அரிச்சுவடி சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்ற சலசலப்புகள் கேட்கும் இச்சந்தர்ப்பத்தில் ஆங்கில அரிச்சுவடியில் கூட இவ்வாறான சீர்திருத்தம் ஒன்று எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி இடம்பெறும்.



இந்த முடிவை ஆங்கில மொழி மத்திய ஆணைக்குழு English Language Central Commission எடுத்திருக்கிறது. இதன்பிரகாரம் ஆங்கில எழுத்து “Z” அரிச்சுவடியில் இருந்து நீக்கப்பட, எழுத்து “Z”க்கொண்டு ஆரம்பிக்கும் சொற்களுக்கு பெரும்பாலும் உபயோகிக்கப்படாமல் இருக்கும் எழுத்தான “x” க்கொண்டு பிரதியீடுசெய்யப்படும்.


உதாரணமாக

· zoo என்பது xoo
· zone என்பது xone
· zodiac என்பது xodiac ஆக இனி எழுதப்படப்போகின்றது.

அதேவேளை சொற்களின் இடநடுவே வரும் “Z”க்கு பிரதியீடாக அதே உச்சரிப்பைத்தரும் “s” பாவிக்கப்படும்.

உதாரணம்

· visualize becomes visualise
· analyze becomes analyse
· materialize becomes materialise

அதேவேளை இன்றைய திகதி கூட மாற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிவீர்களா?


ஆம் இன்றைய தினம் ஏப்ரல் மாதத்தின் நாளாக மாற்றப்படவும்போகின்றது. இல்லாத ஆங்கில மொழி மத்திய ஆணைக்குழு ஆங்கில அரிச்சுவடியில் மாற்றத்தை கொடுவரமுடியுமாயின் திகதியை மாற்றுவதுகூட கஷ்டமில்லை.
இதுவும் ஒரு ஏப்ரல் பூல் நியூஸ்




07 May, 2010

மனிதனை கொல்லும் தொலைபேசி இலக்கங்கள் உண்மையா ?

கடந்த சில நாட்களாக உங்களில் பலருக்கு


Death Call's / "Killer Phone Number " Warnings

Hi All,
Its very important news for all of you. Do not pick up calls Under given numbers.
, 9888308001
, 9316048121 91+
, 9876266211
, 9888854137
, 9876715587
These numbers will come in red color, if the calls comes up from these numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency and it causes brain ham range.
It's not a joke rather, its TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7.
Forward this message to all u'r friends and colleagues, and relatives

என்றொரு sms / email வந்திருக்கும். நமது நண்பர்கள் நம்மீது கொண்ட அக்கறையினால் இதை அனுப்பியிருப்பர்.

இதில் (7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587) எனும் கையடக்கத் தொலைபேசி இலக்கங் களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) கார ணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள் ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) (email) ஈமெயில் மூலமும் அனுப்பப்பட்டது.

ஆனால் இது உண்மையா?
இணையத்தில் தேடிப்பார்த்தபோது இந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் அனுப்பப்பட தொடங்கியிருப்பது தெளிவாகுகிறது.

மக்கள் அச்சப்படும் 2007 இல் வெள்ளிக்கிழமை வந்த ஏப்ரல் 13 இல் இது பாகிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை பொறுப்புவாய்ந்த ஊடகங்களில் இது பற்றி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா?

இல்லை என்பதே பதில். ஒரு ஏப்ரல் பூல் க்கு ஆரம்பிக்கப்பட்ட sms இன்றுவரை தொடர்கிறது போல் தெரிகிறது.

ஆயினும்

இதை மறுத்து ஊடகங்களோ, தொலைத்தொடர்பு நிறுவனங்களோ செய்தி வெளியிடவில்லை.

ஏன்?

எல்லாம் காசுதான். இவ்வாறான smsகளை அனுப்புவதன்மூலம்பணம் சம்பாதிக்கப்போவது யார்? அதே தொலைத்தொடர்பு நிறுவனங்கள்தான்.


11 April, 2010

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.


குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.

recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.


temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.

laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.

laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.

தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.

அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.

ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

.

01 March, 2010

எச்.டி.எம்.எல் என்றால் என்ன ?

Feros Blogspot

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


HOW TO MEET LADIES?


எப்படி எச்.டி.எம்.எல்?
joke joke joke

22 February, 2010

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்
(How to Fix Folder Options Missing in Windows Explorer)
வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.



இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன. இவற்றில் ஒன்றின் மூலம் பிரச்சினையை சரி செய்யலாம்.

தீர்வு 1 registry ஐ எடிட் செய்தல்

Start
Run
இப்போது regedit என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்
HKEY_CURRENT_USER இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
Software இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Microsoftஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Windowsஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

CurrentVersionஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Policiesஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Explorer இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

வலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் பண்ணவும்.

இப்போது HKEY_LOCAL_MACHINE -> Software -> Microsoft -> Windows -> CurrentVersion -> Policies -> Explore வரும் மெனுவில்

வலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் (Delete) பண்ணவும்.

தீர்வு 2 Group Policy செற்றிங்குகளில் மாற்றஞ்செய்தல்
Start
Run
இப்போது gpedit.msc என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்
User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer.

வலது பக்கத்தில் “Removes the Folder Options menu item from theச Tools menu” என்று இருக்கிறதா என்று தேடவும். அதம் மீது ரைட் கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்யவும்.

Enabled என்றிருப்பதை Not Configured அல்லது Disabled. என்று மாற்றவும்

16 January, 2010

எல்லா ப்ரௌசர்களிலும் இருக்கும் ஹிஸ்டரியை ஒரே தரத்தில் அழிக்க வேண்டுமா?





maClear  ஐ முயற்சி செய்து பாருங்கள்

இது மோஸில்லா, எக்ஸ்புளோரர், குரோம் என எல்லா ப்ரௌசர்களிலும் வேலை செய்கிறது. இந்த புரோகிராமை ரன் செய்யமுன் எல்ல ப்ரௌசர்களையும் மூடவேண்டும்.

இது அல்பா வேர்ஷனில் இருக்கிறது.




IEclean, Privacy Cleaner , Internet Privacy Cleanerபோன்ற புறோகிறாம்களையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

11 January, 2010

4 வருட பட்டப்படிப்பு டிகிரீ இல்லாமல் கைநிறைய சம்பாதிக்க சிறந்த தொழில்கள் 10

4 வருட பட்டப்படிப்பு டிகிரீ இல்லாமல் கைநிறைய சம்பாதிக்க சிறந்த தொழில்கள் 10


பட்டப்படிப்பு இல்லாமல் தன்தேவைக்கேற்ப சம்பாதிக்க தொழில் இல்லையா என்று நம்மில் பலர் சிந்தித்திருக்கிறோம். அல்லது தற்போது நாம் செய்யும் தொழில் போதுமான வருமானம் தருவதாக இல்லாதபோது, துறையை மாற்றுவது பற்றி சிந்தித்திருப்போம். ஆனால் நாளாந்த கட்டாய செலவுகள் தலைக்குமேல் போயிருக்கும் நிலையில் 4 வருடங்களை ஒரு பட்டப்படிப்புக்கு செலவிடுவது நினைத்துப்பார்க்க முடியாததொன்று.

பல்வேறுபட்ட துறைகளில் காணப்படும் நலல் வருமானம் தரும் 10 தொழில்களை இப்போது பார்ப்போம். இவை எவற்றுக்கும் பட்டப்படிப்பு தேவையில்லை.

இத்தரவுகள் PayScale.com என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.


1. விற்பனை முகாமையாளர் Sales director
மேலதிகமாக எதையும் படிக்காமல் தன் துறையை மாற்றிக்கொள்வதாயின் விற்பனை துறை பற்றி பரிசீலியுங்கள் என்கிறார் Sharon Reed Abboud
பயிற்சி அத்தியாவசியம் இல்லாதபோதும் கலகலப்பான சுபாவம் மிக அவசியமாகும். இத்தொழில் முகாமைத்துவ வாய்ப்புகளையும் தரக்கூடியது


2. இணைய பாதுகாப்பாளர் Security administrators, computer network
தொழிநுட்பம் அதிகமானோரை எட்டும்போது இணைய திருட்டுக்களும் அதிகரிக்கின்றன. இவ்வாறான இணைய திருட்டுகக்ளை தடுக்க, சீர்திருத்த இணைய பாதுகாப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். இது தொடர்பான கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பது அவசியமானதாகும்.

3. லிப்ட் பொருத்துபவர் / பழுது பார்ப்பவர் Elevator installer/repairer
லிப்ட்களை பொருத்துவது பழுதுபார்ப்பதே இவ்வேலையாகும். இத்துறையில் தேவையான பாட நெறியோடு சம்பளத்துடன் பயிற்சியும் வழங்கப்படுவது விசேட அம்சம்.


4. ரியல் எஸ்டேட் தரகர் Real estate broker
எப்போதும் ஒரு குறிப்பிட்ட வீத தரகுக்கூலி இவர்கட்கு கிடைக்கிறது. இத்தொழில் பொருளாதார ஏற்ற இறக்கங்களுடன் அன்னியோன்யமான தொடர்புகளாஇ கொண்டது.


5. Nuclear medicine technologist / Radiation therapist
வயதான மக்களின் தொகை அதிகரிக்கும்போது சிலவகை நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இவ்வாறான நோய்களுக்கு சிகிச்சையளிக்க அணு கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது. பாடநெறியை பூர்த்தி செய்தல் கட்டாயம்.


6. Radiation therapist
கென்ஸர் நோயாளிகளுக்கான சிகிச்சை முறை. கற்பிப்பவர்களுக்கும் ஆராயச்சி செய்பவர்கட்கும் மிகுந்த வாய்ப்புகளை கொண்ட துறை

7. நிர்மாண முகாமையாளர் Construction manager
நிர்மாண முகாமைத்துவம் சார்ந்த படிப்பு அவசியம். 24 மணிநேர வேலை இது.


8. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் Air traffic controller
விமான பயணஙள் பாதுகாப்பானவையாக் இருப்பதை உறுதி செய்வது இந்த வேலை. இதில் விமானங்களுக்கான நேரசூசிய வடிவமைப்பது, விமானங்களிடயே போதிய இடைவெளியை உறுதி செய்வது என்பனவும் அடங்கும். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கட்கு மிகுந்த தேவை காணப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியை பூர்த்தி செய்தல் வேண்டும்.
9. MRI தொழிநுட்பவியலாளர் MRI technologist
பொருத்தமான பாடநெறியை பூர்த்தி செய்வது அவசியம். மருத்துவ துறையில் மிகுந்த தேவைகளை கொண்ட தொழில் இது.



10. Video game designer
Video game designer கதைக்களத்தையும் விளையாட்டின் விதிகளையும் வடிவமைப்பர். software design மற்றும் computer programming பற்றிய அறிவு அவசியம்.